தவெகவில் போட்டி போட்டு விருப்ப மனுக்கள் பெற்றோர்: பலர் ஒப்படைக்கவில்லை
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தவெக சார்பில் வழங்கப்பட்ட விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றவர்களில் பெரும்பாலானோர் இதுவரை அவற்றை பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 6ஆம் தேதி முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சுமார் 50 ஆயிரம் பேர் விருப்ப மனுக்களை பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது.
பெறப்பட்ட மனுக்களை திரும்ப ஒப்படைக்க வரும் 20ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை பெரும்பாலானோர் மனுக்களை பூர்த்தி செய்து ஒப்படைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து ஒப்படைக்கும் போது பொதுப் பிரிவினரிடம் ரூ.10,000 மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரிடம் ரூ.5,000 செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவும் மனுக்கள் ஒப்படைக்கப்படாததற்கான ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.