இடைக்கால பட்ஜெட் மக்களை இருண்ட பாதைக்கு அழைத்துச் செல்லும்… எல் முருகன்
திமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட், தமிழக மக்களை இருண்ட பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.
சென்னை கொரட்டூரில் நடைபெற்ற சக்தி கேந்திரம் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம், மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர் எல். முருகன் சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மக்களுக்கான எந்த நலத்திட்டங்களும் இடம்பெறவில்லை என்றும், தொலைநோக்கு பார்வையுடன் இந்த பட்ஜெட் தயாரிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், மக்களின் எதிர்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் திட்டங்கள் இல்லாததால், இந்த பட்ஜெட் ஏமாற்றமளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்