பராமரிப்பில்லாத அரசு குடோன்: வண்டுகளால் வீணாகும் தானியங்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு சொந்தமான குடோனிலிருந்து வெளியேறும் வண்டுகளால், அப்பகுதியில் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
மணப்பாறை அருகே பூமாலைப்பட்டியில் அமைந்துள்ள இந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அரிசி உள்ளிட்ட உணவு தானியங்கள் சேமிக்கப்பட்டு, லாரிகள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குடோன் முறையாக பராமரிக்கப்படாததால், அதில் வண்டுகள் உருவாகி தானியங்களை நாசம் செய்வதுடன், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
இதனால், குடோனை உடனடியாக சீரமைத்து, சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.