16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் – 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
சென்னை அருகே அம்பத்தூர் அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், போக்சோ நீதிமன்றம் ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பாடியை சேர்ந்த மஹத், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பில், நீதிபதி உமா மகேஸ்வரி குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.