‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ திருப்பத்தூர் மாவட்ட பறவையாக அறிவிப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தின் மாவட்ட பறவையாக ‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தூய நெஞ்சக் கல்லூரியின் பவளவிழாவை முன்னிட்டு, மாவட்ட பறவையைத் தேர்வு செய்யும் வகையில் பொதுமக்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பு கடந்த 25 நாட்களாக நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில், ‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவை அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது.
இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், ‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ பறவையை மாவட்ட பறவையாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.