தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: அனைத்து கட்சி கூட்டங்கள் திட்டம்

Date:

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி: அனைத்து கட்சி கூட்டங்கள் திட்டம்

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (Special Summary Revision – எஸ்ஐஆர்) அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம். இதற்காக தமிழக தேர்தல் துறை அனைத்து ஏற்பாடுகளையும் முன்னதாக தயார் நிலையில் வைத்துள்ளது.

அறிவிக்கப்பட்டதும், முதலில் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட/வாக்காளர் பதிவு அதிகாரிகள் தலைமையில் அனைத்து கட்சி கூட்டங்கள் நடத்தப்படும். இந்த சிறப்பு திருத்தப்பணியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படாது, வழக்கமான சிறப்பு முகாம்கள் நடைபெறாது. புதிய வழிகாட்டுதலும் தேர்தல் ஆணையம் வெளியிடும்.

எஸ்ஐஆர் பணிகளில் இந்தாண்டு ஜனவரியில் வெளியான இறுதி வாக்காளர் பட்டியல் மற்றும் 2002-03-ல் வெளியான பட்டியல் அடிப்படையாக இருக்கும். தற்போதைய 68,467 வாக்குச்சாவடிகள், 1,200 வாக்காளர்களுக்கு ஒரு சாவடி என்ற கணக்கில் 75,050 ஆக உயரும். எஸ்ஐஆர் தொடங்கும்போது, வீடுவீடாக சென்று வாக்குச்சாவடி அலுவலர்கள் விண்ணப்ப படிவங்களை வழங்குவார்கள். இதற்காக 90 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

விண்ணப்பங்களில் இந்திய குடிமகனாக இருப்பதை நிரூபிக்கும் 11 ஆவணங்களில் ஒன்றை, மற்றும் ஆதார் எண்ணை வழங்கலாம். எஸ்ஐஆர் பணிகளில் இறந்தவர்களின் பெயர்கள், ஒரே நபர் பல இடங்களில் பட்டியலில் உள்ள பெயர்கள் நீக்கப்படும். பணிகள் டிசம்பருக்குள் முடித்து, இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரியில் வெளியாகும். பெயர் நீக்கப்பட்டால் நோட்டீஸ் வழங்கப்படும்; ஆணையம் தெரிவிக்கும் ஆதாரங்களை சமர்ப்பித்து மீண்டும் பெயர் சேர்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக பெண்கள் புகார் – மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனுத் தாக்கல்

பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக பெண்கள் புகார் – மதுரை...

மகன் படுகொலை செய்யப்பட்ட துயரத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை – தென்காசியில் சோகம்

மகன் படுகொலை செய்யப்பட்ட துயரத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை –...

கோழி ராஜன் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு – தூத்துக்குடி வழக்கறிஞர் மனு

கோழி ராஜன் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு – தூத்துக்குடி வழக்கறிஞர்...

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம் உறுதி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதற்கான வரலாற்று ஆதாரம் உறுதி –...