கும்மிடிபூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அவசரமாக நடைபெறும் மின் இணைப்பு பணிகள்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில், முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், மின் இணைப்பு பணிகள் தற்போது அவசர கதியில் நடைபெற்று வருகின்றன.
இந்த முகாமில் 198 வீடுகள் மற்றும் தொழில் கூடங்கள் கட்டப்பட்டு, காணொலி மூலம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டன. இருப்பினும், இந்த கட்டிடங்களுக்கு முறையான மின் இணைப்பு வழங்கப்படாமல் திறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பயன்பாட்டிற்கு திறந்த பின்னர் அவசரமாக மின் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், முகாம் வாசிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படாமல் திறப்பு விழா நடைபெற்றது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.