வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம் – சுகாதார குறைபாடு குற்றச்சாட்டு

Date:

வேப்பேரி காலை உணவு திட்ட சமையல் கூடத்தில் கழிவு நீர் தேக்கம் – சுகாதார குறைபாடு குற்றச்சாட்டு

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் செயல்படும் சமையல் கூடத்தில் கழிவு நீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கான உணவு வேப்பேரியில் அமைந்துள்ள மைய சமையல் கூடத்தில் தயாரிக்கப்படுகிறது.

இந்த சமையல் கூடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கழிவுநீர் தேங்கி, பின்னர் வெளியேறி சாலையிலும் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், சாலையில் தேங்கிய கழிவுநீரால் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கோரமாட்டோம் – நயினார் நாகேந்திரன்

அதிமுகவிடம் ஆட்சியில் பங்கு கோரமாட்டோம் – நயினார் நாகேந்திரன் அதிமுகவுடன் கூட்டணி இருந்தாலும்,...

முதல் பட சம்பளத்தில் பள்ளி கட்டத் தீர்மானித்த மோனலிசா

முதல் பட சம்பளத்தில் பள்ளி கட்டத் தீர்மானித்த மோனலிசா மகா கும்பமேளா நிகழ்வின்...

“மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” – திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி

“மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” – திமுகவுக்கு...

பருப்பு வகைகளுக்கு வரிச்சலுகை இல்லை… இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அமைதியான திருத்தம்

பருப்பு வகைகளுக்கு வரிச்சலுகை இல்லை… இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அமைதியான திருத்தம் இந்தியா–அமெரிக்கா...