சீன துணை வெளியுறவு அமைச்சருடன் விக்ரம் மிஸ்ரி ஆலோசனை
வர்த்தக தொடர்புகள் மற்றும் எல்லைப் பகுதியில் நிலவும் அமைதியை பேணுவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து, மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, சீன துணை வெளியுறவு அமைச்சருடன் கலந்துரையாடினார்.
பிரிக்ஸ் ஷெர்பா மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனாவின் அமைச்சர் மாசுவோக் இந்திய தலைநகர் டெல்லிக்கு வருகை தந்துள்ளார்.
அவரை சந்தித்த வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இரு நாடுகளின் இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இந்தியா–சீனா எல்லைப் பகுதிகளில் நீடித்த அமைதியை நிலைநிறுத்தும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.
மேலும், ஐக்கிய நாடுகள் அமைப்பில் இந்தியாவை நிரந்தர உறுப்பினர் நாடாக அங்கீகரிக்கும் முயற்சிக்கு சீனா ஆதரவு வழங்க வேண்டும் என சீன அமைச்சரிடம் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.