தூய்மை பணியாளர்களுக்கு விசில் தடை – சிவகங்கை திமுக நகர்மன்ற உறுப்பினர் உத்தரவு
சிவகங்கை நகராட்சியின் ஒரு வார்டில், வீடு தோறும் குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் விசில் ஊதுவதைத் தடை செய்து திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிவகங்கை நகராட்சி 21வது வார்டை பிரதிநிதித்துவப்படுத்தி வரும் திமுக கவுன்சிலர் அயூப்கான், தனது பகுதியில் பணிபுரியும் தூய்மை தொழிலாளர்கள் வீடுகளுக்கு செல்லும் போது வருகையை அறிவிக்க விசில் பயன்படுத்தி வந்த நிலையில், அதை நிறுத்துமாறு அறிவித்துள்ளார்.
சமீபத்தில் தவெக கட்சிக்கு தேர்தல் ஆணையம் ‘விசில்’ குறியீட்டை ஒதுக்கியுள்ளதன் பின்னணியில், தனது வார்டில் அந்த சின்னத்துடன் தொடர்புடைய ஒலி எழாதிருக்க வேண்டும் என்ற காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், தூய்மை பணியாளர்கள் விசிலுக்கு பதிலாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து குப்பை சேகரிக்க வேண்டும் எனவும், அதற்கான கருவி வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையை தவெக நிர்வாகிகள் மற்றும் நடிகர் விஜய் ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.