மார்ச் 1 முதல் யுடிஎஸ் மொபைல் செயலி பயன்பாடு நிறுத்தம்
மார்ச் மாதம் முதல் தேதி முதல் யுடிஎஸ் மொபைல் செயலி செயல்பாட்டில் இருக்காது என்றும், அதற்குப் பதிலாக “ரயில் ஒன்” என்ற புதிய செயலியை பயன்படுத்த வேண்டும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே சேவைகளை பொதுமக்கள் எளிதில் பெற பல்வேறு மொபைல் செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் முக்கிய இடம் பெற்ற யுடிஎஸ் செயலி, கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அந்த யுடிஎஸ் செயலியை மார்ச் 1 முதல் நிறுத்த முடிவு செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே சமயம், பயணிகள் மற்றும் பயனாளர்கள் “ரயில் ஒன்” செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.