எதில் முதலிடம்? – திமுக பிராந்திய அரசை கடுமையாக விமர்சித்த வேலூர் இப்ராஹிம்
தமிழகத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், இவ்வகை செயல்பாடுகளில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பாஜக சிறுபான்மை அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக ஆட்சி சாதனைகளில் அல்ல, தோல்விகளில்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக கடுமையாக விமர்சித்தார். திமுக ஆட்சிக்காலத்தில் டாஸ்மாக் வருவாயில் தமிழகம் முதலிடம் வகிப்பதாகவும், தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பு நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறினார்.
மேலும், மாநிலத்தின் கடன் சுமை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், வெளிநாட்டு பயணங்கள் குறித்து ஆதாரமற்ற தகவல்களை வெளியிடுவதிலும் திமுக அரசு முதலிடம் வகிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதுபோன்ற தொடர்ச்சியான தோல்விகளின் காரணமாகவே, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக பிராந்திய ஆட்சி ‘நம்பர் ஒன்’ என தன்னைச் சுட்டிக்காட்டிக் கொள்கிறது என்றும் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.