H-1B விசா கட்டுப்பாடுகள் எதிரொலி : அமெரிக்க AI துறைக்கு கடும் சவால்

Date:

H-1B விசா கட்டுப்பாடுகள் எதிரொலி : அமெரிக்க AI துறைக்கு கடும் சவால்

அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் திறமைமிக்க வெளிநாட்டு நிபுணர்களை பணியில் அமர்த்த ஆர்வம் காட்டி வரும் நிலையில், அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த கடுமையான H-1B விசா கட்டுப்பாடுகள், அந்தத் துறையின் வளர்ச்சிக்கு பெரிய தடையாக மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கடும் விசா கொள்கைகள் காரணமாக, 2025 நிதியாண்டில் இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்கள் பெற்ற H-1B விசா அனுமதிகள் வெறும் 4,573 ஆக மட்டுப்பட்டுள்ளன. இது 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 70 சதவீத சரிவையும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37 சதவீத குறைவையும் காட்டுகிறது.

மேலும், 2025 நிதியாண்டில் புதிய வேலைவாய்ப்புகளுக்காக அதிக H-1B மனுக்கள் ஒப்புதல் பெற்ற முதல் 25 நிறுவனங்களின் பட்டியலில், இந்திய நிறுவனங்கள் மூன்றே இடங்களைப் பெற்றுள்ளன.

AI தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்து வரும் அமெரிக்க நிறுவனங்களுக்கு, குறிப்பாக AI திறன் கொண்ட நிபுணர்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், H-1B விசா கட்டுப்பாடுகள் அந்த தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.

தேசிய அமெரிக்க கொள்கை அறக்கட்டளை வெளியிட்ட குடியேற்றத் தரவுகளின்படி, 2025 நிதியாண்டில் அமேசான், மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் சமர்ப்பித்த புதிய H-1B தொழிலாளர் நிபந்தனை விண்ணப்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை AI தொடர்பான பணிகளுக்கே உரியவையாக இருந்துள்ளன.

இதேவேளை, H-1B விசா புதுப்பிப்பு தொடர்பான நேர்காணல்கள் 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதும், வெளிநாட்டு திறமையாளர்களுக்கு மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

உலகளவில் AI துறையில் முன்னணியில் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் இலக்கை, ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகள் தானே தடை செய்து விடுமோ என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

2025 ஆம் ஆண்டில், அமேசான், மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களே அதிக அளவில் புதிய H-1B மனுக்களை ஒப்புதல் பெற்றுள்ளன. AI துறைக்கான பெரும் முதலீடுகளை சமாளிக்க, இந்நிறுவனங்கள் வெளிநாட்டு நிபுணர்களை அதிகம் சார்ந்துள்ளன.

இந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த மூலதனச் செலவுகள் 380 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், கூகுள் மட்டும் 185 பில்லியன் டாலர் வரை, மெட்டா 300 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீட்டை உயர்த்த திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க குடியேற்ற ஊதிய விதிமுறைகள் காரணமாக, செலவைக் குறைக்க H-1B ஊழியர்களை நியமிக்க முயற்சிக்கும் நிறுவனங்கள் கடும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. AI முதலீடுகள் அமெரிக்க பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளன என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தச் சூழலில், அமெரிக்க அரசின் புதிய குடியேற்றக் கட்டுப்பாடுகள், AI துறையில் வெளிநாட்டு திறமைகளை ஈர்ப்பதில் பெரும் தடையாக மாறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் விளைவாக, செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் அமெரிக்கா குறிப்பிடத்தக்க பின்னடைவை சந்திக்கக்கூடும் என்றும், சீனாவுக்கு எதிரான AI போட்டியில் அமெரிக்க ஆதிக்கம் நிலைத்திருக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி ஆகும் சூழல்

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி ஆகும்...

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் – திமுக அரசுக்கு அண்ணாமலை காலக்கெடு

பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் – திமுக அரசுக்கு அண்ணாமலை...

மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் பண முறைகேடு – ஆளும் கட்சி நிர்வாகிகள் மீது புகார்

மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோயிலில் பண முறைகேடு – ஆளும் கட்சி...

சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு – துணைத் தேர்தல் ஆணையர் தமிழகத்திற்கு வருகை

சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு – துணைத் தேர்தல் ஆணையர்...