பாஜக முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கேசவ விநாயகனுக்கு ஆர்.எஸ்.எஸ்.-ல் புதிய பொறுப்பு
பாஜக முன்னாள் மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகனுக்கு தற்போது ஆர்.எஸ்.எஸ்.-ல் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாநில அமைப்பில் பொதுச்செயலாளராக இருந்த அவர், புதிய பொறுப்பில் செயல்படுவார் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அறிவிப்பில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழுநேர ஊழியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பல்வேறு பொறுப்புகளில் மாற்றப்படுவார்கள் எனவும், இது நிலையான நடைமுறையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி, கேசவ விநாயகன் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சத்பாவ் பொறுப்பில் செயல்படுவார், மேலும் வட தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். மாநில செயற்குழு உறுப்பினராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்