பட்டாசு சேமிப்பு மையத்தில் பயங்கர வெடிப்பு – தொழிலாளி ஒருவர் கவலைக்கிடம்!
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே அமைந்துள்ள பட்டாசு சேமிப்பு மையத்தில் ஏற்பட்ட திடீர் வெடிச்சம்பவத்தில், தொழிலாளி ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆலமரத்துப்பட்டி டேம்ரோடு பகுதியில் அசோக்குமார் மற்றும் சரவணன் ஆகியோரின் உரிமையில் இயங்கி வரும் பட்டாசு தயாரிப்பு மற்றும் சேமிப்பு நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.
அங்கு பணியாற்றி வந்த மாசிலாமணி என்பவர், வழக்கம்போல் பட்டாசு சேமிப்பு பகுதிகளில் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக பட்டாசுகளில் தீப்பற்றி அதனைத் தொடர்ந்து பலத்த வெடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் உடனடியாக அங்கு விரைந்து வந்து, நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தின் காரணமாக பட்டாசு கிடங்கும், அதனை ஒட்டியிருந்த கொட்டகையும் முற்றிலும் தீயில் கருகி சேதமடைந்தன.