சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் வழங்கும் விழா
சென்னையில் ராஜஸ்தானி அசோசியேஷன் தமிழ்நாடு சார்பில் ராஜஸ்தானி தமிழ் சேவா விருதுகள் வழங்கும் விழா மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது.
கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலப் பணிகளில் தொடர்ந்து சேவை செய்து வரும் ராஜஸ்தானி அசோசியேஷன் சார்பில், சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதி மகாதேவன் தலைமை விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பித்தார். சமூகத்திற்கு ஆற்றிய சேவைகளை பாராட்டும் விதமாக, மருத்துவம் மற்றும் கல்வித் துறையில் பங்களித்த சுதா சேஷயன், ஓதுவார் சேவைக்காக சற்குருநாதன் மற்றும் கே.ஆர்.ராஜா உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.
விருது பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் தலா 2 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.
விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தானி அசோசியேஷனின் முன்னாள் தலைவர் பிரவீண் டாட்டீயா, சமூக சேவைகளில் மேலும் பலர் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே இந்த விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவித்தார்.