திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் காரணமாக ஸ்டாலின் பதற்றமான சூழலில் தேர்தலை எதிர்கொள்கிறார் – நிர்மலா சீதாராமன்

Date:

திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் காரணமாக ஸ்டாலின் பதற்றமான சூழலில் தேர்தலை எதிர்கொள்கிறார் – நிர்மலா சீதாராமன்

திமுக அமைச்சர்களின் அண்மைய செயல்பாடுகள் காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதற்றத்துடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க நேரிடும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான சவாலை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி முழுமையான ஒற்றுமையுடனும், வலிமையுடனும் செயல்பட்டு வருவதாக கூறிய அவர், திமுக இதுவரை பழகிய வழக்கமான அரசியல் பாணியில் இந்த தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஓராண்டு காலமாக திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை உருவாக்கியுள்ளதாகவும், அதன் விளைவாக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலை மனஅழுத்தத்துடன் எதிர்கொள்கிறார் என்றும் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

மேலும், தென் மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜஸ்தான்: ஒருவர் மீது ஒருவர் எரியும் கட்டைகளை வீசி ‘ரார் ஹோலி’ – 250 ஆண்டுகால வினோத வழிபாடு!

ராஜஸ்தான்: ஒருவர் மீது ஒருவர் எரியும் கட்டைகளை வீசி 'ரார் ஹோலி'...

“வளைகுடா கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

"வளைகுடா கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும்" - அதிபர் ட்ரம்ப்...

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: “தீபத்தூணில் மலர் தூவ வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி அறிவுறுத்தல்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: "தீபத்தூணில் மலர் தூவ வேண்டும்" - உயர்நீதிமன்ற...

ஒடிசாவில் போக்குவரத்துப் புரட்சி: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பாஜக அரசின் சாதனை!

ஒடிசாவில் போக்குவரத்துப் புரட்சி: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பாஜக அரசின்...