மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் என்டிஏ மாநாடு – நயினார் நாகேந்திரன் தலைமையில் திட்டமிடல் கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ள பொதுக்கூட்டம் தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வரும் 28ஆம் தேதி, மதுரை மண்டேலா நகர் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்த நிலையில், மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவது, கூட்டத்தில் பங்கேற்கும் மக்களின் எண்ணிக்கை, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், மாநில பொதுச் செயலாளர்கள் கருப்பு முருகானந்தம், பேராசிரியர் ராம் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.