மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடி – ஏற்பாடுகள் வேகமெடுப்பு
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், மதுரையில் வரும் 28-ந் தேதி நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் செயல்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வரிசையில், தேசிய ஜனநாயக கூட்டணியும் பல்வேறு முன்னெடுப்புகளுடன் களத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மதுரையில் நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் இரண்டாவது பொதுக்கூட்டம் வரும் 28-ந் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரடியாக தேர்வு செய்ய உள்ளதாகவும், ஏற்பாட்டு பணிகளை அவ்வப்போது ஆய்வு செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ள இந்த மாநாட்டில், தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள், ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.