மாணவர்கள் முன்னேறினால் நாடும் முன்னேறும் – ஆளுநர் ஆர்.என்.ரவி
மாணவர்கள் வளர்ச்சி அடையும் போது, அதனுடன் சேர்ந்து நாடும் முன்னேற்றம் காணும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மாணவர்கள் நேர மேலாண்மையை முறையாக பின்பற்றுவது வாழ்க்கையில் வெற்றிக்கு முக்கிய காரணம் என அறிவுறுத்தினார். எந்தத் துறையை தேர்வு செய்தாலும், அதில் சிறந்தவர்களாக விளங்க கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், மாணவர்கள் கல்வி, ஒழுக்கம் மற்றும் திறன் வளர்ச்சியில் உயரும்போது, அந்த முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமையும் என ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்