மத்திய பட்ஜெட்டில் காந்தி பெயரில் புதிய முயற்சி
காங்கிரஸ் மற்றும் மற்ற இண்டி கூட்டணி கட்சியினரின் எதிர்ப்பை கடந்து, மகாத்மா காந்தி பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை விரிவுபடுத்தி, கூடுதல் அம்சங்களுடன் மத்திய அரசு வேறு பெயரில் புதிய திட்டமாக செயல்படுத்தியுள்ளது.
இதற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, மத்திய பட்ஜெட்டில் “மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ்” என பெயரிடப்பட்ட புதிய திட்டத்தை, காதி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறைக்கு ஊக்கமளிக்கும் நோக்கத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதன் மூலம் கதர், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகள் உருவாகும்; நெசவாளர்கள் மற்றும் கிராமத் தொழில் துறையினர் அதிக நன்மை பெறுவர் என்றும் அவர் தெரிவித்தார்.