• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

EU வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திய அதிர்வெடிப்பு – பாகிஸ்தான், துருக்கி, வங்கதேசம் திணறல் | ஒரே ஒப்பந்தத்தில் நான்கு நாடுகளுக்கு செக் வைத்த இந்தியா!

athibantv by athibantv
ஜனவரி 31, 2026
in Bharat, Big-News
A A
0
👁️ 2.2K 🔥

EU வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திய அதிர்வெடிப்பு – பாகிஸ்தான், துருக்கி, வங்கதேசம் திணறல் | ஒரே ஒப்பந்தத்தில் நான்கு நாடுகளுக்கு செக் வைத்த இந்தியா!

ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், சாதாரண பொருளாதார உடன்படிக்கையாக மட்டும் இல்லாமல், இந்தியாவை அடிக்கடி சீண்டி வரும் பாகிஸ்தான், வங்கதேசம், துருக்கி ஆகிய நாடுகளுக்கு கடும் அதிர்ச்சியாக மாறியுள்ளது. அதே நேரத்தில், வரி விதிப்பு என்றாலே கர்ஜிக்கும் அமெரிக்காவுக்கும் இந்த ஒப்பந்தம் எரிச்சலையும் பொறாமையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாக, ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான 90 சதவீதத்துக்கும் மேலான சுங்க வரிகள் முற்றிலுமாக நீக்கப்படவோ அல்லது கணிசமாக குறைக்கப்படவோ உள்ளன. இதுவே இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய பலமாகக் கருதப்படுகிறது.

2032ஆம் ஆண்டுக்குள் இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான வர்த்தக அளவு இரட்டிப்பாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு மட்டும் சுமார் 4 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு செலவுச் சேமிப்பு கிடைக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. இதன் தாக்கம் பாகிஸ்தான், வங்கதேசம் மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் துருக்கி போன்ற நாடுகளிலும் எதிரொலிக்கக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனை எளிமையாகச் சொன்னால், “ஒரே ஒப்பந்தத்தில் நான்கு நாடுகளுக்கு அழுத்தம்” என்றே கூறலாம்.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கும், வெளிநாடுகளில் செயல்படும் காலிஸ்தான் தீவிரவாத குழுக்களுக்கும், இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான நெருங்கிய உறவு அபாய எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த வர்த்தக ஒப்பந்தத்துடன் சேர்ந்து, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பும் வலுப்பெற்றுள்ளது. கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளை தளமாகக் கொண்டு செயல்படும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் மீது இனி கூடுதல் கண்காணிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் அந்த வட்டாரங்களில் உருவாகியுள்ளது.

பூஜ்ய வரி சலுகையின் மூலம் ஐரோப்பிய சந்தைகளுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்து ஆண்டுக்கு சுமார் 30 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி வந்த வங்கதேசம், இந்த புதிய ஒப்பந்தத்தால் பெரும் கவலையில் மூழ்கியுள்ளது. சமீபத்திய பேட்டியொன்றில் வங்கதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ், குறைந்த வரி காரணமாக இந்திய நிறுவனங்கள் வங்கதேசத்தை நோக்கி நகரும் என பெருமையுடன் கூறியிருந்தார். ஆனால், இப்போது இந்தியாவுக்கே நேரடி வரி விலக்கு கிடைத்ததால் அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, தற்போது 7 பில்லியன் டாலராக இருக்கும் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி, எதிர்காலத்தில் 30 முதல் 40 பில்லியன் டாலர் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய சந்தைகளில் இந்திய ஆடைகள் அதிக அளவில் இடம்பெறுவதால், தரம், விலை மற்றும் போட்டித்திறன் ஆகியவற்றில் வங்கதேச ஆடைகள் பின்தள்ளப்படும் சூழல் உருவாகும் வாய்ப்பு அதிகம்.

RelatedPosts

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

மார்ச் 21, 2026
ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

மார்ச் 21, 2026

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆயுத உதவிகளை வழங்கிய துருக்கி, அதன் பின்னர் இந்தியாவுடன் உறவுகளில் விரிசலை சந்தித்தது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் உடனான இந்தியாவின் புதிய ஒப்பந்தம், துருக்கிக்கும் சிக்கலை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது. காரணம், ஐரோப்பிய யூனியன் குறைக்கும் வரி விதிப்பை துருக்கியும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இந்தியா துருக்கி மீது விதிக்கும் வரிகளை ஐரோப்பிய யூனியன் கட்டுப்படுத்த முடியாது. இதனை துருக்கி எவ்வாறு சமாளிக்கும் என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கும், வரி மிரட்டல்களுக்கும் அடிபணியாத இந்தியா, அதிபர் டிரம்ப் வெளியிட்ட பல்வேறு சர்ச்சைக்குரிய அறிவிப்புகளை பொருட்படுத்தாமல், தனது பொருளாதார பாதையில் தைரியமாக முன்னேறியுள்ளது. அதற்கான பதிலடியாகவே, ஐரோப்பிய யூனியனுடன் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்தியா இறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதன் விளைவாக, இந்தியாவின் பெரும் சந்தை வாய்ப்புகளை அமெரிக்கா இழந்துள்ளது என்ற கருத்து அந்நாட்டின் அரசியல் வட்டாரங்களில் விவாதமாகி வருகிறது. டிரம்பின் கடுமையான வரி கொள்கைகள் அவருக்கே எதிராக மாறக்கூடும் என்ற அழுத்தம், அவரது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரிடையே அதிகரிக்கக்கூடும்.

மொத்தத்தில், இந்தியா மேற்கொண்ட இந்த நுட்பமான வர்த்தக நடவடிக்கை, அமெரிக்காவின் பொருளாதார அச்சுறுத்தல்களுக்கு நேரடி பதிலாகவும், உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் மாறியுள்ளது என்பதே அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

EU வர்த்தக ஒப்பந்தம் – ஒரே ஒப்பந்தத்தில் நான்கு நாடுகளுக்கு செக் வைத்த இந்தியா! AthibAn Tv

Related

Tags: Bharat
Previous Post

தமிழக பாஜக சமூக ஊடக நிர்வாகி பிரவீன் ராஜ் கைது – நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்

Next Post

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை இப்போது இல்லை – பாகிஸ்தான் ராணுவ அமைச்சர்

RelatedPosts

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்துடன் சுவாமி தரிசனம்

மார்ச் 21, 2026
ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

மார்ச் 21, 2026
போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை: 165 பள்ளி மாணவிகள் படுகொலையான கோரம் – ஒரு சிறப்புப் பார்வை!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை: 165 பள்ளி மாணவிகள் படுகொலையான கோரம் – ஒரு சிறப்புப் பார்வை!

மார்ச் 20, 2026
புதுச்சேரி என்டிஏ கூட்டணி: தொகுதிப் பங்கீடு இறுதி – என்.ஆர்.காங்கிரஸிற்கு 16 இடங்கள்!

புதுச்சேரி என்டிஏ கூட்டணி: தொகுதிப் பங்கீடு இறுதி – என்.ஆர்.காங்கிரஸிற்கு 16 இடங்கள்!

மார்ச் 20, 2026
உலகிற்கு மோதல்கள் தேவையில்லை, தர்மமும் அமைதியுமே தீர்வு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரை!

உலகிற்கு மோதல்கள் தேவையில்லை, தர்மமும் அமைதியுமே தீர்வு: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உரை!

மார்ச் 20, 2026
Next Post
Home

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை இப்போது இல்லை – பாகிஸ்தான் ராணுவ அமைச்சர்

Home

விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்: வெறிச்சோடிய பனையூர் அலுவலகம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு
  • ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்
  • டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.