நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Date:

நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச நடைமுறைகள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டி, நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து 15-க்கும் அதிகமான கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 33 கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கூட்டம் தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பின்பு, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் கூட்ட அரங்கத்தை விட்டு வெளியேறினர்.

நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில் ஈடுபட்டு வருவதாகவும், வீடுகள் மற்றும் காலியாக உள்ள நிலங்களுக்கு வரி நிர்ணயம் செய்யும் போது பெரும் தொகை லஞ்சமாக வசூலிக்கப்படுவதாகவும் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.

அதிகாரிகளின் இந்த முறைகேடுகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், நகரத்தின் பல பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்புகள் சேதமடைந்து கழிவுநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது என்றும் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்கும்?

மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகள்: ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்கும்? மத்திய...

தரமற்ற உணவால் ஏன் விளம்பர நாடகம்? – அண்ணாமலை குற்றச்சாட்டு

தரமற்ற உணவால் ஏன் விளம்பர நாடகம்? – அண்ணாமலை குற்றச்சாட்டு தமிழகத்தின் தூய்மைப்...

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து வணங்கிய மாணவி!

பட்டமளிப்பு விழாவில் ஆளுநரின் காலில் விழுந்து வணங்கிய மாணவி! சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற...

அமெரிக்காவின் தலையீடு: உக்ரைனில் ரஷ்யா-போர் தற்காலிக இடைநிறுத்தம்

அமெரிக்காவின் தலையீடு: உக்ரைனில் ரஷ்யா-போர் தற்காலிக இடைநிறுத்தம் உக்ரைனில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக,...