மத்திய செம்மொழித் தமிழாய்வு முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் ஞானசுந்தரம் மறைந்தது ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், தமிழ் பண்பாடு மற்றும் இலக்கிய வளர்ச்சிக்காக ஞானசுந்தரம் வழங்கிய அரிய பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூரப்படும் என குறிப்பிட்டுள்ளார். அவரது எழுத்துப் பணிகள் சமூகத்தின் கலாச்சார விழிப்புணர்வை மேலும் வளப்படுத்தியதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஞானசுந்தரத்தின் படைப்புகள் எதிர்கால தலைமுறை வாசகர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அவருடன் நடைபெற்ற உரையாடலை நினைவுகூர்ந்தும் பிரதமர் மோடி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், மத்திய அமைச்சர் எல். முருகன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் ஞானசுந்தரத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.