3வது ஆண்டாக பழனி முருகன் கோயிலுக்கு மாலை அணிந்து விரதம் தொடங்கிய வானதி சீனிவாசன்
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி முருகன் கோயிலுக்கு 3வது ஆண்டாக மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.
கோவை ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க் பகுதியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவியும், பாஜக எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வருகை தந்து,
முருகப்பெருமானுக்கு மாலை அணிந்து விரதத்தை ஆரம்பித்தார்.
இந்த ஆன்மிக நிகழ்வில், 50-க்கும் மேற்பட்ட மகளிர் உறுப்பினர்கள் வானதி சீனிவாசனுடன் இணைந்து மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர்.
அனைவரும் “அரோகரா” முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்து, முருகப்பெருமானின் அருளைப் பெற்றனர்.
மூன்றாவது ஆண்டாக தொடரும் இந்த விரதம்,
ஆன்மிக நம்பிக்கையும் பக்தியும் ஒன்றிணையும் தருணமாக அமைந்தது.
முருகனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். அரோகரா!