நீலகிரியில் கடும் குளிர் – தலைக்குந்தாவில் பூஜ்ஜியம் டிகிரி வெப்பநிலை
நீலகிரி மாவட்டத்தில் கடும் குளிர் அலை தீவிரமாக உணரப்பட்டு வருகிறது. இதன் பலனாக, தலைக்குந்தா பகுதியில் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸாக பதிவு செய்யப்பட்டது.
ஆண்டுதோறும் டிசம்பர்-ஜனவரி மாதங்கள் உறை பனிப்பொழிவு காலமாகும், இதனால் நீலகிரியில் பனி பரவலாக பெய்கிறது. சில நாட்களுக்கு முன்பு, உதகை உயரத்துக்கு குறைவான குன்னூர் பகுதிகளில் அதிக குளிர் ஏற்பட்டிருந்தது; தற்போது அங்கு உறை பனி கொட்டி வருகிறது.
இந்த சூழலில், தலைக்குந்தா புல்வெளிகளில் பச்சை புல் வெள்ளைக் கம்பளத்தை போல காட்சியளித்தது. இருப்பினும், சுற்றுலாபயணிகள் உறை பனியில் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.