ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் – நம்மாழ்வார் கோயில் திரு அத்யயன உற்சவம் கோலாகலம்

Date:

ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் – நம்மாழ்வார் கோயில் திரு அத்யயன உற்சவம் கோலாகலம்

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் அமைந்துள்ள ஆதிநாதர் சுவாமி நம்மாழ்வார் கோயிலில் நடைபெற்று வரும் திரு அத்யயன உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திபரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருத்தலமாகப் போற்றப்படும் இந்தக் கோயில், நம்மாழ்வார் அவதரித்த புனிதத் தலமாக சிறப்பு பெற்றது. இங்கு ஆண்டுதோறும் பகல் பத்து மற்றும் ராப்பத்து என 21 நாட்கள் நீடிக்கும் திரு அத்யயன உற்சவம் மிகுந்த பக்தி மற்றும் வைபவத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

உற்சவத்தின் முதல் நாளில், ஸ்ரீஉடையவர், கூரத்தாழ்வான், பிள்ளை லோகாச்சாரியர், வேதாந்த தேசிகர் உள்ளிட்ட ஆச்சாரியர்களுடன் சுவாமி நம்மாழ்வார் யானை முன்னணியில் மேளதாள முழக்கத்துடன் சன்னதிக்கு எழுந்தருளினார்.

இதனைத் தொடர்ந்து, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கூடிய பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இந்தப் புனித நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் பெருமாளை தரிசித்து ஆன்மிக மகிழ்ச்சி அடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆத்தூர் அருகே சோகம்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி முதியவர் பலி!

ஆத்தூர் அருகே சோகம்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி முதியவர்...

ஹார்முஸ் ஜலசந்தி போர் பதற்றம்: ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் பலி!

ஹார்முஸ் ஜலசந்தி போர் பதற்றம்: ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்திய...

“அரசு அலுவலகம் 4 நாள்… பள்ளிக்கு லீவு”: பாகிஸ்தானின் வினோதக் கட்டுப்பாடுகள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

"அரசு அலுவலகம் 4 நாள்... பள்ளிக்கு லீவு": பாகிஸ்தானின் வினோதக் கட்டுப்பாடுகள்...

திருப்பதியில் எல்.முருகன் – நயினார் நாகேந்திரன் தரிசனம்: சங்கராச்சார்யரை சந்தித்து ஆசி பெற்றனர்!

திருப்பதியில் எல்.முருகன் - நயினார் நாகேந்திரன் தரிசனம்: சங்கராச்சார்யரை சந்தித்து ஆசி...