45 நாட்கள் கடந்த அமெரிக்க வரி விதிப்பால் MSME ஏற்றுமதியாளர்கள் நெருக்கடியில்: நிவாரணம், கடனுதவி கோரிக்கை

அமெரிக்கா விதித்த புதிய வரி நடவடிக்கைகள் 45 நாட்கள் கடந்தும் அமலுக்கு வந்த நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தர (MSME) ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரண தொகுப்பு மற்றும் குறைந்த வட்டியில் கடனுதவி திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் விரைவாக அறிவிக்க வேண்டும் என தொழில் துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகுநாதன் தெரிவித்ததாவது, “2021-ல் வெளியான தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டு கொள்கை காலாவதியாகி விட்டது. அமெரிக்காவின் 50 சதவீத வரி காரணமாக MSME ஏற்றுமதியாளர்கள் கடுமையான நெருக்கடியில் உள்ளனர். அதனால் அரசு கொள்கையை புதுப்பித்து, நேரடி நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில் MSME நிறுவனங்கள் மூடப்படுகின்றன, தொழிலாளர்கள் வேலை இழக்கின்றனர்.”

அவர் தெரிவித்த உடனடி நடவடிக்கைகள்:

  • MSME ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரண தொகுப்பு மற்றும் குறைந்த வட்டியில் கடன் வழங்குதல்
  • ஜிஎஸ்டி திருப்பிச் செலுத்தல், கப்பல் செலவுக்கான உதவி
  • அவசர சூழ்நிலைகளில் சுங்க வரி, நெறிமுறைகள் குறித்து உதவி
  • புதிய சந்தைகளை நோக்கி பிராண்டிங், சான்றிதழ், சந்தை மேம்பாடு
  • ஏற்றுமதி நெருக்கடிகளை நேரடியாக கண்காணிக்கும் குழு அமைத்தல்

தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயபால், “ஜவுளித் துறை ரூ.90,000 கோடி, ரத்தினங்கள் ரூ.85,000 கோடி, ஆட்டோமொபைல் பாகங்கள் ரூ.58,000 கோடி மதிப்பில், ரசாயனம் மற்றும் உரங்கள் ரூ.23,000 கோடி மதிப்பில் ஏற்றுமதி செய்கின்றன. இந்த பொருட்களின் விலை உயர்வு அமெரிக்க டீலர்கள் மூலம் மாற்றப்பட்ட விநியோகஸ்தர்களை பாதிக்கலாம். MSME நிறுவனங்கள் சுமார் 40% பங்களிப்பு அளிக்கின்றன. அதனால் நிலையான சந்தை பாதையை உருவாக்க புதிய சந்தைகளை தேட வேண்டும்” எனக் கூறினார்.

தமிழ்நாடு ஒபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத் தலைவர் அருள்மொழி, “அமெரிக்காவின் 50% வரி காரணமாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் ஜவுளி பொருட்களை ஏற்றுமதி செய்த நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு கடன் திருப்பிச் செலுத்தும் தகுதியை 2 ஆண்டுகள் விலக்கு அளிக்க வேண்டும். 25% நிதி கிரெடிட் உயர்த்த வேண்டும். பாலியஸ்டர், விஸ்கோஸ் போன்ற செயற்கை இழை இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தரக் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

Facebook Comments Box