ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. கடுமையாக கொட்டிய பனிமழையால் அப்பெண்ணையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்துள்ளனர்.
இது தொடர்பாக ராணுவத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வீட்டுக்கு சென்ற ராணுவ வீரர்கள் பனிமழைக்கு நடுவே தாயையும் குழந்தையும் ஸ்ட்ரெச்சரில் வைத்துக் கொண்டு சுமார் 6 கி.மீ. தொலைவு நடந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

காஷ்மீரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே… தாயையும் சேயையும் 6 கி.மீ சுமந்து சென்ற ராணுவ வீரர்கள் pic.twitter.com/GLJgho1U2y

— தமிழ் செய்தி (@Tamil_News_one) January 24, 2021

The post காஷ்மீரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே… தாயையும் சேயையும் 6 கி.மீ சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்… வீடியோ..! appeared first on தமிழ் செய்தி.

Facebook Comments Box