• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 6, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Big-News

பாகிஸ்தானுடன் சேர்ந்து சீனா–துருக்கி சதி : தவிர்க்க முடியாத இரண்டாம் கட்ட ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ – லெப்.ஜெ. துஷ்யந்த் சிங் எச்சரிக்கை

athibantv by athibantv
டிசம்பர் 16, 2025
in Big-News, World
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.8K 🔥 📋

பாகிஸ்தானுடன் சேர்ந்து சீனா–துருக்கி சதி : தவிர்க்க முடியாத இரண்டாம் கட்ட ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ – லெப்.ஜெ. துஷ்யந்த் சிங் எச்சரிக்கை

இரண்டாம் கட்ட ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது என்றும், அதற்கான முழுமையான தயாரிப்புடன் இந்தியா இருக்க வேண்டும் என்றும், Land Warfare Studies மையத்தின் இயக்குனரும், ஓய்வுபெற்ற இந்திய ராணுவ உயர் அதிகாரியுமான லெப்டினன்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங் தெரிவித்துள்ளார்.

1968 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய விமானப்படையின் 18-வது படைப்பிரிவில் விமானியாக சேர்ந்த நிர்மல் ஜித் சிங் ஷெகோன், 1971 இந்தியா–பாகிஸ்தான் போரின் போது தன்னிகரற்ற வீரத்தைக் காட்டினார். ஸ்ரீநகரை தளமாகக் கொண்டு செயல்பட்ட அவர், எதிரியின் இடைவிடாத தாக்குதல்களையும் பொருட்படுத்தாமல் போர்க்களத்தில் முன்நின்று போராடினார்.

Related posts

தமிழகத்தின் புதிய விடியல்: தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது த.வெ.க!

2026 தமிழக அரசியல் தேர்தல்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்… அடுத்து என்ன? – ஆளுநரின் கையில் தமிழகத்தின் எதிர்காலம்

மே 5, 2026
திருவண்ணாமலை சிறுமி பாலியல் வன்கொடுமை: திமுக அரசிற்கு அண்ணாமலை கடும் கண்டனம்!

அண்ணாமலை போன்ற ஒரு தலைவன் உருவாக்கிய வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது பாஜக மேலிடத்தின் உத்தி

மே 5, 2026

1971 டிசம்பர் 14-ஆம் தேதி, பாகிஸ்தான் விமானப்படை பதான்கோட், ஸ்ரீநகர் மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியபோது, அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் நிர்மல் ஜித் சிங் ஷெகோன் நாட்டுக்காக தன் உயிரைத் தியாகம் செய்தார். இந்திய விமானப்படையில் பரம் வீர் சக்ரா விருது பெற்ற ஒரே வீரர் என்ற பெருமை அவருக்கே உரியது. அவரது வீரத்தை நினைவுகூரும் வகையில், இந்திய விமானப்படை ஆண்டுதோறும் நினைவுச் சொற்பொழிவுகளை நடத்தி வருகிறது.

இந்த ஆண்டு, குஜராத் கிளை விமானப்படை சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்வில் உரையாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் துஷ்யந்த் சிங், ‘ஆப்ரேஷன் சிந்தூர்’ என்பது ஒரு முடிவல்ல; அது இந்தியாவின் புதிய பாதுகாப்பு வியூகத்தின் தொடக்கம் எனக் குறிப்பிட்டார். சீனா மற்றும் துருக்கியின் ஆதரவுடன் பாகிஸ்தான் காஷ்மீர் மீது தீவிர கவனம் செலுத்தி வருவதாக கூறிய அவர், இதன் விளைவாக மீண்டும் ஒரு ஆப்ரேஷன் சிந்தூர் மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என எச்சரித்தார்.

ஆப்ரேஷன் சிந்தூரின் வெற்றி, பாகிஸ்தானின் பலவீனங்களை உலகின் முன் வெளிப்படுத்தியதுடன், அணு ஆயுத வரம்புக்குக் கீழே இருந்தபடியே பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா தைரியமாக செயல்பட முடியும் என்பதையும் நிரூபித்ததாக அவர் தெரிவித்தார். 1971 போருக்குப் பிறகு முதன்முறையாக முப்படைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மிகச் சிறப்பாக செயல்பட்டதாகவும், அரசியல் தெளிவு, ராணுவ துல்லியம் மற்றும் வான் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.

ஆப்ரேஷன் சிந்தூர் நடைபெற்ற நான்கு நாட்களில், அரசு இணையதளங்கள் மீது நடந்த சைபர் தாக்குதல்கள் ஏழு மடங்கு அதிகரித்ததாகவும், மின்சாரத் துறை மட்டும் சுமார் இரண்டு லட்சம் சைபர் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தேசிய பங்குச் சந்தை மீது சுமார் 40 கோடி சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதிலும், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை முழுமையாக முறியடித்தன என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானும் சீனாவும் சமூக ஊடகங்களில் இந்தியாவுக்கு எதிரான பொய்க் கதைகளை தீவிரமாகப் பரப்பி வருவதாக சுட்டிக்காட்டிய துஷ்யந்த் சிங், தவறான தகவல்களை எதிர்கொள்வதற்காக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு தேசிய பாதுகாப்பு தகவல் வியூகம் அவசியம் என வலியுறுத்தினார்.

காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருப்பதால், எதிர்காலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார். இதனை எதிர்கொள்ள உளவுத்துறை, பாதுகாப்புச் செலவுகள் மற்றும் பல்துறை போர் திறன்களில் விரிவான சீர்திருத்தங்கள் தேவை என்றும், எந்தவொரு தாக்குதலையும் தடுத்து நிறுத்தவும், உறுதியான பதிலடி கொடுக்கவும் இந்தியாவின் முப்படைகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

விவசாயிகளை நம்பிக்கையூட்டி ஏமாற்றுவது தான் பாராட்டப்படும் நல்லாட்சியா? – முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் சவால்

Next Post

சமஸ்கிருதத்தின் மகத்துவத்திற்கு புதிய முத்திரை : பாகிஸ்தானில் கற்பிக்கப்படும் சமஸ்கிருத மொழி

Next Post

சமஸ்கிருதத்தின் மகத்துவத்திற்கு புதிய முத்திரை : பாகிஸ்தானில் கற்பிக்கப்படும் சமஸ்கிருத மொழி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அவசர அழைப்பு!

தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

மே 6, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து
  • “சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்
  • தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN