நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் : துணை குடியரசுத் தலைவர், பிரதமர் அஞ்சலி
நாடாளுமன்றம் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் 24-ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
2001ஆம் ஆண்டு, தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்திய நாடாளுமன்றம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதில், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தின் நினைவாக, நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.