தமிழகத்தில் SIR படிவங்கள் 98.23% ஆன்லைனில் பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
தமிழகத்தில் SIR தொடர்பான படிவங்களின் இணையப் பதிவேற்றம் 98.23% நிறைவு பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய SIR கணக்கெடுப்பு பணிகள் வரும் 11ஆம் தேதியுடன் நிறைவடையவிருக்கிறது. இந்த செயல்பாட்டில் 68,470 வாக்குச்சாவடி மட்ட அலுவலர்கள் பங்கேற்று பணியாற்றி வருகின்றனர்.
மொத்தமாக தமிழகத்தில் உள்ள 6 கோடி 41 லட்சம் 14 ஆயிரத்து 587 வாக்காளர்களில், 99.81% பேருக்கு — அதாவது 6 கோடி 39 லட்சம் 95 ஆயிரத்து 854 பேருக்கு — SIR படிவங்கள் வழங்கப்பட்டுவிட்டன என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 6 கோடி 29 லட்சம் 79 ஆயிரத்து 208 படிவங்கள் மீண்டும் சேகரிக்கப்பட்டுள்ளதுடன், 98.23% படிவங்கள் இணையத்தில் வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.