• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

அனுமதி மறுப்பால் பொதுமக்கள் அதிருப்தி: செம்மொழிப் பூங்கா அவசரமாகவே திறந்ததா?

athibantv by athibantv
டிசம்பர் 2, 2025
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 1.9K 📋

அனுமதி மறுப்பால் பொதுமக்கள் அதிருப்தி: செம்மொழிப் பூங்கா அவசரமாகவே திறந்ததா?

கோவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த செம்மொழிப் பூங்கா, இன்னும் பொதுப் பயன்பாட்டுக்கு தயாராகாததால், வருகை தரும் மக்கள் விரக்தியுடன் திரும்பிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பணிகள் முழுமையாக முடிவடையும் முன்பே இடம் திறக்கப்பட்டதுதான் இந்நிலைக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

Related posts

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

ஏப்ரல் 18, 2026
“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

ஏப்ரல் 18, 2026

கோவை மத்திய சிறைச்சாலையின் பரப்பில், 45 ஏக்கரில், 208 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்த பூங்கா கடந்த நவம்பர் 25ஆம் தேதி திறக்கப்பட்டது.

ஆனால், பணிகள் அவசரமாக முடிக்காமல் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்பே குற்றம்சாட்டியிருந்தார்.

தற்போதும் பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருப்பதால், அதிகாரிகள் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்க மறுப்பதால், வருவோர் எல்லாம் ஏமாற்றத்துடன் மீண்டும் திரும்பிச் செல்லும் நிலை நீடிக்கிறது.

நுழைவு வாயிலின் முகப்பு, மாநாட்டு மண்டபம், சுற்றுச்சுவர், விளையாட்டு திடல், திறந்தவெளி உடற்பயிற்சி பகுதி உள்ளிட்ட பல அமைப்புகள் இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் உள்ளன.

மேலும், இப்பணிகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி கூட பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

பார்வையாளர்களுக்குத் தேவையான உணவகம், குடிநீர், கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகளும் இப்போது கிடைக்காத நிலையில்,

“இவ்வளவு அவசரத்தில் பூங்காவை திறக்க வேண்டிய அவசியம் என்ன?”

என்ற கேள்வி பொதுமக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.

கோவை செம்மொழிப் பூங்காவை திறந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாததைச் சுற்றிய விவாதம் முதல், தற்போது அனுமதி மறுப்பு வரை பல குழப்பங்கள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன.

எந்த ஒருத் திட்டத்தையும் திறந்து வைக்கும் முன், அதற்கான பணிகள் முழுமையாக முடிந்துள்ளதா என்பதை முதலில் உறுதி செய்த பிறகே முதலமைச்சர் தொடங்கி வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வலுத்து வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

காந்தாரா காட்சியைச் சுற்றிய சர்ச்சை: ரன்வீர் சிங் மன்னிப்பு தெரிவித்தார்

Next Post

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி: உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அறநிலையத்துறை மேல்முறையீடு

Next Post

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி: உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அறநிலையத்துறை மேல்முறையீடு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

ஏப்ரல் 18, 2026
“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

ஏப்ரல் 18, 2026
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!
  • “தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!
  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி: எதிர்க்கட்சிகளைக் கண்டித்து நாடு தழுவிய போராட்டத்திற்கு என்டிஏ (NDA) திட்டம்!

ஏப்ரல் 18, 2026
“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

“தோல்வி பயத்தால் கலவரத்தைத் தூண்ட திமுக முயற்சி” – இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம்!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN