“பொய் கதைகளின் சக்கரவியூகத்தில் இருந்து தப்புவது கடினம்” – ஜெகதீப் தன்கர்

Date:

குடியரசு முன்னாள் துணை தலைவர் ஜெகதீப் தன்கர், பொய் கதைகள் எனப்படும் சக்கரவியூகத்தில் இருந்து விடுபடுவது கடினம் என்றார். குடியரசு துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, ஜெகதீப் தன்கர் முதல்முறை பொதுக் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற நவீன தொழில்நுட்பங்களால் சமூகத்திலும் நாகரிகத்திலும் மோதல்கள் அதிகரித்து வருகின்றன என்று குறிப்பிட்டார்.

“மன உறுதி, ஆன்மீகம் மற்றும் அறிவு ஆகியவற்றிலிருந்து சிலர் விலகுவது வருத்தமானது. நம் நாட்டின் ஆழமான கலாசார மற்றும் ஆன்மிக மரபுகளில் இருந்து வலிமையை பெறுவது அவசியம்,” என்று அவர் கூறினார்.

மேலும், ஒருவரின் மனதை குழப்பி செயல்பாட்டை பாதிக்கும் பொய் கதைகள் போன்ற சக்கரவியூகங்களில் இருந்து விடுபடுவது மிகுந்த சவால் என்று ஜெகதீப் தன்கர் குறிப்பிட்டார். இதுபோன்ற சூழலில், யாரும் சிக்காமல் கடவுள் காப்பாற்ற வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வசூலில் தாறுமாறாக ஓடும் ‘காந்தா’ – 10 நாட்களில் ரூ.40 கோடி தாண்டியது!

வசூலில் தாறுமாறாக ஓடும் ‘காந்தா’ – 10 நாட்களில் ரூ.40 கோடி...

குடியுரிமை விதிகள் தளர்வு – C-3 திருத்தச் சட்டம் இந்திய வம்சாவளி குடும்பங்களுக்கு பெரும் நிவாரணம்

கனடா அரசு கொண்டு வந்துள்ள C-3 குடியுரிமை திருத்த மசோதா, அந்நாட்டில்...

தினசரி சந்தையில் தேங்கிய மழைநீர்: கண்ணீர் வடிக்கும் தலைவாசல் வியாபாரிகள்

சேலம் மாவட்டம் தலைவாசலில் தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக அங்குள்ள தினசரி...

கிராமங்களில் திமுக வெற்றி பெறும் வாய்ப்பு வெறும் கற்பனை – நயினார் நாகேந்திரன்

தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கிராமப்புறங்களில் திமுக வெற்றி...