ஆவடி அருகே நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் பலி

Date:


ஆவடி அருகே நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பட்டாபிராம் அருகிலுள்ள தண்டுரை பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று நாட்டு ரக வெடிகள் விற்பனை நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில், அங்கு விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிகள் திடீரென வெடித்தன. வெடிப்பின் தாக்கத்தில் வீடு முழுவதும் சிதறி சேதமடைந்தது.

இந்த விபத்தில்,

  • திருநின்றவூர் நத்தம்மேடு பகுதியைச் சேர்ந்த சுனில் பிரகாஷ் (22),
  • யாசின் (28),

    மேலும் வெடி விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் என மொத்தம் நான்கு பேர் தீக்காயமடைந்து, இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

தகவல் அறிந்தவுடன் பட்டாபிராம் போலீஸார் மற்றும் ஆவடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

சம்பவ இடத்துக்கு ஆவடி காவல் ஆணையர் சங்கர், துணை ஆணையர் பெரோஸ் அப்துல்கான், ஆவடி வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆவடி காவல் ஆணையர் சங்கர் தெரிவித்ததாவது:

“வெடிகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் தான் விபத்துக்கான காரணம் தெளிவாகும்,” என்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக பட்டாபிராம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறுமியின் அன்புக்கு நெகிழ்ந்து நன்றி கூறி உறுதி அளித்த பிரதமர் மோடி

சிறுமியின் அன்புக்கு நெகிழ்ந்து நன்றி கூறி உறுதி அளித்த பிரதமர் மோடி மதுராந்தகத்தில்...

நேற்றுவரை பிரகாசமாகத் தோன்றிய சூரியன் – அண்ணாமலை கருத்து

நேற்றுவரை பிரகாசமாகத் தோன்றிய சூரியன் – அண்ணாமலை கருத்து நேற்றுவரை பிரகாசமாகத் தோன்றிய...

பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெற்றோர்களின் பாதங்களைத் துதி செய்து ஆசி பெற்றனர்

பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெற்றோர்களின் பாதங்களைத் துதி செய்து ஆசி...

“சர்வதேச ரவுடி” போக்கில் டிரம்ப் – உலகம் முழுவதும் அதிகரிக்கும் விமர்சனங்கள்

“சர்வதேச ரவுடி” போக்கில் டிரம்ப் – உலகம் முழுவதும் அதிகரிக்கும் விமர்சனங்கள் பகிரங்க...