ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்கள் விநியோகம் – பதில் அளிக்காவிட்டால் துறைச் செயலர்கள் ஆஜராக வேண்டும் என்று உயர் நீதிமன்ற எச்சரிக்கை

Date:

ரேஷன் கடைகள் மூலம் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக அல்லது மானிய விலையில் வழங்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில், வரும் டிசம்பர் 16க்குள் பதில் சமர்ப்பிக்காதின், சுகாதாரம் உள்ளிட்ட மூன்று துறைகளின் செயலர்கள் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தாம்பரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் லட்சுமி ராஜா தாக்கல் செய்த பொது நல மனுவில்,

  • பெண்கள் மாதவிடாய் காலங்களில் சுகாதார பாதுகாப்பு மிக முக்கியமானது,
  • சந்தையில் நாப்கின்கள் அதிக விலை கூடியதால் ஏழை மற்றும் கிராமப்புற பெண்கள் அதை வாங்க முடியாத நிலை இருப்பது,
  • இதனால் மாற்று மற்றும் பாதுகாப்பற்ற முறைகள் பயன்படுத்தப்படுவதால் ஆரோக்கியப் பிரச்சினைகள் உருவாகின்றன,
  • பள்ளிகளில் இலவச நாப்கின் வழங்கும் திட்டம் இருந்தாலும், ரேஷன் கடைகள் மூலம் பெண்களுக்கு இலவசமாக அல்லது மானிய விலையில் நாப்கின்கள் வழங்க எந்த திட்டமும் தமிழகத்தில் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டது.

எனவே, கிராமப்புற ஏழை பெண்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் நாப்கின்களை வழங்க வேண்டும் என அவர் கோரினார்.

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டபோது, ஏற்கனவே இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டும் பதில் தாக்கல் செய்யப்படவில்லை என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

அதனால், டிசம்பர் 16க்குள் பதில் மனு தாக்கல் செய்யாதின்,

  • சமூக நலத் துறை,
  • உணவுப் பொருள் வழங்கல் துறை,
  • சுகாதாரத் துறை

    என மூன்று துறைகளின் செயலர்களும் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என எச்சரித்து, வழக்கு அடுத்த தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஒப்பீடு: 2026 மீனவப் பெண்கள் வாக்குகள்… விஜய்யின் ‘விசில்’ மற்றும் பிரதமரின் ‘தாமரை’ இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டி…

2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு மும்முனைப் போட்டியிலிருந்து, பலமுனைத்...

பெண் வாக்கு வங்கியில் விஜய்யின் ‘விசில்’ சின்னம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பல காரணங்கள்

2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக...

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம்… ஆன்மீகம் மற்றும் கலாச்சார இணைப்பு… திமுக மீதான நேரடித் தாக்குதல்

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம் மற்றும் அவரது உத்திகள் தென்...