ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரூ.1,251 கோடி நிலுவை ஊதியம் – அதை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

Date:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நிறைவுசெய்யப்பட்ட பணிகளுக்கான ரூ.1,251.39 கோடி ஊதியம் இதுவரை வழங்கப்படாமல் உள்ளது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:

இந்த ஆண்டிற்கான திட்டத்தில் தமிழகத்துக்கு 12 கோடி மனித வேலைநாட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது முன்பு வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளை விட மிகக் குறைவு. ஆட்சிக்கு வரும் முன், தமிழக மக்களுக்கு 150 நாள் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவோம் என்று வாக்குறுதி அளித்த திமுக அரசு, வேலைநாட்கள் குறைக்கப்பட்டுள்ளதற்கு எந்தவித எதிர்ப்பும் பதிவு செய்யவில்லை.

மேலும், திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான நிலுவை ஊதியத்தைப் பெற்றுத்தருவது, மாநில அரசின் அடிப்படை பொறுப்பாகும். எனவே, ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய நிலுவை ஊதியத்தை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தரும் நடவடிக்கையை திமுக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்ஐஆரை ஆதரித்து உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுக – “இது வெட்கக்கேடு” : முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில்...

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: டைபிரேக்கரில் தோல்வி – பிரக்ஞானந்தா வெளியேற்றம்

கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில், இந்திய...

“யார் முதல்வராக வரக்கூடாது என்பதை பிஹார் மக்கள் தெளிவாக கூறியுள்ளனர்” – தமிழக பாஜக

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) இரண்டில் மூன்றாம்...

அப்பாவின் பாதையைத் தொடர்ந்து ரஜினி கிஷன்!

தமிழ் திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளாகப் படங்களை தயாரித்து வருவதுடன், ரிலீஸ்...