நித்யானந்தா ஆசிரமங்களில் இருந்து சீடர்களை வெளியேற்றும் உத்தரவுக்கு தடையுத்தரவு – மதுரை உயர்நீதிமன்றம்

Date:

ராஜபாளையம் பகுதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமங்களில் இருந்து சீடர்களை வெளியேற்ற கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அதை அமல்படுத்த வேண்டாம் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நித்யானந்த தியானபீட அறங்காவலர் சந்திரசேகரன் தாக்கல் செய்த மனுவில், ராஜபாளையம் அருகே சேத்தூர், கோதைநாச்சியாபுரம் பகுதிகளில் மருத்துவர் கணேசனின் சொந்த நிலங்களில் ஆசிரமங்கள் செயல்பட்டு வந்ததாகவும், அங்கிருந்த பெண் சீடர்களை வெளியேற்ற கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்ததையும், டிஎஸ்பி அதை நிறைவேற்ற முயல்கிறார் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிரான வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், ஆசிரமங்களில் இருந்து யாரையும் வெளியேற்ற முடியாது என மனுதாரர் வாதிட்டார்.

மனுவை விசாரித்த நீதிபதி எல். விக்டோரியா கௌரி, கோட்டாட்சியரின் வெளியேற்ற உத்தரவை ரத்து செய்து, சீடர்களை ஆசிரமங்களில் இருந்து வெளியேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

எஸ்ஐஆரை ஆதரித்து உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுக – “இது வெட்கக்கேடு” : முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில்...

ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களுக்கு ரூ.1,251 கோடி நிலுவை ஊதியம் – அதை பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நிறைவுசெய்யப்பட்ட...

ஃபிடே உலகக் கோப்பை செஸ்: டைபிரேக்கரில் தோல்வி – பிரக்ஞானந்தா வெளியேற்றம்

கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில், இந்திய...

“யார் முதல்வராக வரக்கூடாது என்பதை பிஹார் மக்கள் தெளிவாக கூறியுள்ளனர்” – தமிழக பாஜக

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) இரண்டில் மூன்றாம்...