துல்கர் சல்மான் உண்மையான ‘நடிப்பு சக்கரவர்த்தி’: பாக்யஸ்ரீ போர்சே பாராட்டு

Date:

தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை செய்யும் நடிகை பாக்யஸ்ரீ போர்சே, துல்கர் சல்மானை “உண்மையான நடிப்பு சக்கரவர்த்தி” எனப் பாராட்டியுள்ளார்.

பாக்யஸ்ரீ, துல்கர் சல்மான் நடித்த ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகிறார். மீடியா மற்றும் வேஃபரர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் ராணா டகுபதி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படம் நாளை வெளியாகிறது.

திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பாக்யஸ்ரீ போர்சே தெரிவித்துள்ளார்:

“என்னை நம்பி, இப்படம் வாய்ப்பளித்த இயக்குநர் செல்வமணி செல்வராஜ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவர் எனது முதல் ஆசிரியர், இயக்குநர்.

நடிகர் ராணா முதல் நாளிலிருந்தே எனக்கு ஆதரவாக இருந்து வருகிறார். இந்தப் பயணத்தில் அவரை வழிகாட்டியாகக் கொண்டிருப்பது எனக்குப் பெரும் அதிர்ஷ்டம். அவரின் ஊக்கமின்றி நான் இப்படத்தில் சிறப்பாக நடிக்க முடியாது.

துல்கர் சல்மான் ஒரு உண்மையான ‘நடிப்பு சக்கரவர்த்தி’. அவருடன் நடித்த அனுபவம் எனக்கு மறக்க முடியாத ஒன்று. ஒவ்வொரு காட்சியிலும் அவர் வெளிப்படுத்திய உணர்ச்சி, நேர்த்தியான நடிப்பு – எல்லாமே எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்.

இதுவரை எனை ஒரு கமர்ஷியல் நடிகை என்றே அழைத்துள்ளனர். ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு மக்கள் என்னை ஒரு ‘சிறந்த நடிகை’ என்று கூறுவார்கள் என நம்புகிறேன்,” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...