திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் கணக்காளர் திடீர் பணியிட மாற்றம்

Date:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் பணிபுரிந்து வந்த கணக்காளர் விஜயன், திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அந்தக் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தணிக்கை துறையினர் வரவு-செலவு கணக்குகளை ஆய்வு செய்தனர். அதில், வருவாய் பதிவுகளில் சில குளறுபடிகள் இருப்பதாக தணிக்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கோயில் நிலங்களில் அரசு சார்பில் நடைபெறும் திட்டப் பணிகளைப் பற்றியும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகத்தினருக்கிடையே முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இதனைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக கோயிலில் பணியாற்றி வந்த விஜயன், நிர்வாக காரணங்களுக்காக கடலூர் மாவட்டம் பிரளயகாலேஸ்வரர் கோயிலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தணிக்கை ஆய்வுக்கு பிறகு கணக்காளர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது, திருக்கழுக்குன்றம் கோயில் நிர்வாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 55% முதல் 58%...

ஹசன் ஜாய் 169 ரன்கள் விளாசல்: வங்கதேசம் 338 ரன்கள் குவிப்பு

சைல்ஹெட், வங்கதேச: வங்கதேசம் – அயர்லாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட்...

நீதிபதி மீது காலணி வீச முயற்சி: ஆவேசத்தில் ரவுடி கருக்கா வினோத்

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச வழக்கில் அதிகபட்ச சிறை...

ரஜினி படத்திலிருந்து சுந்தர்.சி திடீர் விலகல் — உருக்கமான விளக்கம்!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173’...