மகாபாரதம் டி.வி தொடரில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் மறைவு

பி.ஆர். சோப்ரா இயக்கிய 1988-ம் ஆண்டின் தொலைக்காட்சி தொடரான மகாபாரதம் இல் கர்ணனாக நடித்ததால் புகழ்பெற்ற நடிகர் பங்கஜ் தீர் நேற்று மறைந்தார். அவருக்கு வயது 68.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். சந்திரகாந்தா, பதோ பாகு, கானூன் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும், சோல்ஜர், ஆண்டாஸ், பாட்ஷா போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அவரது மகன் நிகிதின் தீர் மற்றும் மருமகள் கிராத்திகா செங்கர் இருவரும் நடிகர்கள் ஆவர்.

பஞ்சாபைச் சேர்ந்த பங்கஜ் தீர், திரைப்பட இயக்குநர் சி.எல். தீர் அவர்களின் மகன். நடிப்பைத் தாண்டி தனது சகோதரருடன் சேர்ந்து மும்பையில் ஒரு படப்பிடிப்பு ஸ்டுடியோவை நிறுவி, திரைப்படத் தயாரிப்பிலும் பங்காற்றினார். 2010-ஆம் ஆண்டு நடிப்பு பயிற்சிக்கான அகாடமியையும் தொடங்கினார்.

1980-களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவருக்கு, பி.ஆர். சோப்ராவின் மகாபாரதம் தொடரே மிகப்பெரிய புகழை அளித்தது.

Facebook Comments Box