பிஹார் தேர்தலில் 20 ஆண்டாக போட்டியிடும் டெலிவரி ஊழியர்

பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சோட்டே லால் மகதோ, காஸ் சிலிண்டர் விநியோக ஊழியராக இருக்கிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தலிலும் மனம் தளராமல் போட்டியிட்டு வருகிறார்.

எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி தேர்தல்கள் எல்லாவற்றிலும் கலந்து கொண்டு மக்களை பிரதிநிதியாக மாற்றும் கனவைக் கண்டு வருகிறார். வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலிலும் மகதோ போட்டியிடுகிறார்.

மகதோ கூறியதாவது:

“சிறிய வீட்டில்தான் வாழ்கிறேன். 2004 முதல் நகராட்சி தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் மனம் தளராமல் போட்டியிட்டேன். முன்னாள் மத்திய அமைச்சர் சையத் ஷாநவாஸ் உசேன், சீமாஞ்சலின் காந்தி போன்ற அனுபவமிக்க அரசியல்வாதிகளை எதிர்த்து போட்டியிட்டேன். இதுவரை வெற்றி பெறவில்லை. ஆனால், மக்களின் ஆதரவு எனக்கு அதிகமாக உள்ளது. மக்கள் என்னைப் போன்று சாதாரண தலைவரை விரும்புகிறார்கள். இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவேன்.”

மகதோவின் மனைவி, ஆடு, கோழி, முட்டைகளை விற்பனை செய்து கணவரின் பிரச்சாரத்திற்கு நிதி திரட்டுகிறார். பிரச்சாரத்தின் போது எப்போதும் மக்களுடன் இருப்பார். மகதோ நம்புகிறார், வாக்காளர்கள் இந்த முறை அவருக்கு வாய்ப்பு கொடுப்பார்கள்.

Facebook Comments Box