பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்திற்கு விற்பனை

Date:

பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய 2 கூறல் மீன்கள் ரூ.1.65 லட்சத்திற்கு விற்பனை

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடற்கரையில் மீனவர் வலையில் இரண்டு அரிய வகை கூறல் மீன்கள் சிக்கி, ரூ. 1,65,600-க்கு விற்பனையாகியுள்ளன.

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் இருந்து வியாழக்கிழமை இரவு 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர். வெள்ளிக்கிழமை காலை கரை திரும்பியபோது, ஒரு வலையில் 22 கிலோ மற்றும் 24 கிலோ எடையிலான கூறல் மீன்கள் சிக்கியிருந்தன. மொத்தம் 46 கிலோ எடையுள்ள இந்த மீன்கள், கிலோவுக்கு ரூ.3,600 வீதம் ஏலத்தில் விற்கப்பட்டன.

பாம்பன் மீனவர்கள் கூறுகையில்,

“கூறல் மீன் உணவுக்காகப் பயன்படுத்தப்படாது. அதன் வயிற்றுப் பகுதியில் இருக்கும் காற்றுப்பை (fish maw) மிகுந்த மதிப்புடையது. இது பீர், ஒயின், ஜெல்லி மிட்டாய் போன்ற பொருட்களில் சுவை மற்றும் நீண்டகால தாங்குதன்மையை அதிகரிக்கப் பயன்படுகிறது. மேலும், கிழக்கு ஆசிய நாடுகளில் இதனைக் கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்கப்படுகிறது,” என்று தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் – 8 மணி நேர காத்திருப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் – 8...

வாஜ்பாய் 100-வது பிறந்தநாள் விழா – 280 பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கல்

வாஜ்பாய் 100-வது பிறந்தநாள் விழா – 280 பயனாளிகளுக்கு இலவச கேஸ்...

குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா – கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்

குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் திருவாதிரை திருவிழா – கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம் தென்காசி...

பிரதமருடன் உரையாடும் வாய்ப்பு – வாழ்வின் முக்கியமான தருணம் என கபடி வீராங்கனை நெகிழ்ச்சி

பிரதமருடன் உரையாடும் வாய்ப்பு – வாழ்வின் முக்கியமான தருணம் என கபடி...