தொழிலதிபர் அனில் அம்பானி நவ.14-ல் ஆஜராக வேண்டும்: அமலாக்கத் துறை சம்மன்
பண மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானிக்கு (66) அமலாக்கத் துறை நேரில் ஆஜராக விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
அறிக்கைகள் தெரிவிப்பதாவது: அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் வங்கிகளில் கடன்பெற்று அதனை தவறாக பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஏற்கெனவே அமலாக்கத் துறை ₹7,500 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியுள்ளது.
பாரத் ஸ்டேட் வங்கியில் கடன்பெற்று மோசடி செய்தது தொடர்பாக விசாரணை நடத்த நவம்பர் 14-ம் தேதி அனில் அம்பானி நேரில் ஆஜராக வேண்டும். கடந்த ஜூலை 24-ம் தேதி நடந்தச் சோதனையின் பின்னர், ஆகஸ்ட் மாதம் விசாரணை நடைபெற்றது மற்றும் அவர் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டார். இதுவே இரண்டாவது சம்மன் என குறிப்பிடத்தக்கது.