மத்தியப் பிரதேச கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு
Madhya Pradesh மாநிலத்தின் உமரியா கிராமத்தில் கடுமையான குடிநீர் நெருக்கடி நிலவி வருகிறது. அங்கு வசிக்கும் குழந்தைகள் மற்றும் பெண்கள் தினமும் பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் சேகரிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேடு பள்ளங்கள் நிறைந்த மலைப்பாங்கான பாதைகளைக் கடந்து, சுமார் 2 முதல் 3 கிலோமீட்டர் தூரம் வரை நடந்து சென்று தான் அவர்கள் தண்ணீர் எடுத்து வர முடிகிறது. இந்த கடினமான பொறுப்பு பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறுவர்களின் தோள்களில் சுமத்தப்பட்டிருப்பது வேதனையை அதிகரிக்கிறது.
இந்த விவகாரம் தற்போது தான் அதிகாரப்பூர்வமாக தனது கவனத்திற்கு வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
கிராம மக்களுக்கு விரைவில் குடிநீர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும், எதிர்காலத்தில் நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தினமும் தண்ணீருக்காக பல மணி நேரம் அலைந்து திரியும் நிலை விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையில், உமரியா கிராம மக்கள் காத்திருக்கின்றனர்.





