சர்க்கார் சாமக்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், இன்று சர்க்கார் சாமக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதால் தொகுதி மக்களிடையே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரசாரத்தின் போது, அப்பகுதி மக்களிடம் நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்த அவர், அங்குள்ள கோவில்களில் வழிபாடு செய்தார். வழிநெடுகிலும் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பொதுமக்களிடையே உரையாற்றிய அருண்குமார், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும், இந்தத் தேர்தலுக்காக அதிமுக அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் விரிவாக எடுத்துக்கூறினார். தொகுதியின் வளர்ச்சியைத் தொடர ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்களித்துத் தன்னை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக-வினர் தங்களது களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.




