வேட்புமனுவில் குளறுபடி? தவெக தலைவர் விஜய்யின் பிரமாணப் பத்திரத்தில் மாறுபட்ட தகவல்கள்!
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது பிரமாணப் பத்திரங்களில் மாறுபட்ட தகவல்களைக் குறிப்பிட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் தன் மீது எந்தவிதமான குற்ற வழக்குகளும் இல்லை என்று விஜய் குறிப்பிட்டுள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்துள்ள பத்திரத்தில் தனக்கு எதிராக இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரே வேட்பாளர் இரு வெவ்வேறு தொகுதிகளில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களில் வழக்கு விவரங்கள் முரணாக உள்ளதால், அவரது வேட்புமனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தத் தகவல் தற்போது சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.




