பிரதமர் மோடியின் சென்னை பயணம்: ரோடு ஷோ குறித்து நாராயணன் திருப்பதி விளக்கம்!
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் ரோடு ஷோவில் (Road Show) பங்கேற்கப்போவதாக பரவி வரும் தகவல்கள் தவறானவை என்று பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமரின் பயணத் திட்டம் குறித்துக் கூறுகையில், பிரதமர் மோடி இன்று சென்னை வழியாகப் புதுச்சேரி சென்று அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார். புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மீண்டும் சென்னை திரும்பும் பிரதமர், இன்று இரவு இங்கு தங்கிவிட்டு நாளை கேரளாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சென்னையில் பிரதமர் ரோடு ஷோ நடத்த வாய்ப்புள்ளதாக வெளியான செய்திகளை மறுத்த நாராயணன் திருப்பதி, அத்தகைய திட்டம் ஏதும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தினார்.





