ரஷ்யாவின் புதிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதி? – அமெரிக்கா வெளியிட்ட முக்கியத் தகவல்
வாஷிங்டன்: ரஷ்யா புதிதாக உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெய்க்கான தடையை விலக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் அரசியல் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பன்மடங்கு உயர்வதைத் தடுக்க அமெரிக்கா இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.
ஏற்கனவே ரஷ்யாவிலிருந்து கப்பல்களில் ஏற்றப்பட்ட கச்சா எண்ணெயை இந்தியா வாங்கிக் கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்திருந்த நிலையில், தற்போது தேவைப்பட்டால் ரஷ்யா புதிதாக உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயையும் இறக்குமதி செய்துகொள்ள அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்துத் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சர் கிரிஸ் ரைட், எண்ணெய் விலை உயர்வைத் தடுப்பதற்கான ஓர் இடைக்கால நிவாரண நடவடிக்கையாக இதனை அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.