மும்பையில் கோலாகலம்: தொழிலதிபர் சானியா சந்தோக்கை கரம் பிடித்தார் அர்ஜுன் டெண்டுல்கர்!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனும், இளம் கிரிக்கெட் வீரருமான அர்ஜுன் டெண்டுல்கர், தனது நீண்டகால தோழியும் தொழிலதிபருமான சானியா சந்தோக்கை மணமுடித்தார். தெற்கு மும்பையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த திருமண விழா, விளையாட்டு மற்றும் வணிக உலகின் சங்கமமாகத் திகழ்ந்தது. மணமகள் சானியா சந்தோக், இந்தியாவின் புகழ்பெற்ற தொழிலதிபர் ரவி காயின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜுன் மற்றும் சானியா ஆகிய இரு குடும்பங்களும் நீண்டகாலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர்.
அர்ஜுனின் சகோதரி சாரா டெண்டுல்கரின் தோழியான சானியாவுக்கும் அர்ஜுனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மலர்ந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், தற்போது பல்வேறு சடங்குகளுடன் திருமணம் இனிதே நடைபெற்றது. இந்த விழாவில் பிசிசிஐ (BCCI) நிர்வாகிகள், இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் எனப் பலரும் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சமூக வலைதளங்களில் இந்த நட்சத்திர ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.